சித்தி முஸ்தா முலியா
இந்தோனேசியப் பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் மதப் பேராசிரியர் / From Wikipedia, the free encyclopedia
சித்தி முஸ்தா முலியா (Siti Musdah Mulia) (பிறப்பு 1958) இந்தோனேசியப் பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் மதப் பேராசிரியரும் ஆவார்.[1] இந்தோனேசிய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார். தற்போது சியாரிஃப் இதயதுல்லா மாநில இசுலாமிய பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆய்வுகள் பள்ளியில் இசுலாமிய அரசியல் சிந்தனைத் துறை விரிவுரையாளராக உள்ளார்.[2][1][3] 2007 முதல், இந்தோனேசியாவில் மதங்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட மதம் மற்றும் அமைதி குறித்த இந்தோனேசிய மாநாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராக சித்தி பணியாற்றியுள்ளார்.[4][5] முன்னாள் இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் மேகவதி சுகர்ணோபுத்திரியால் நிறுவப்பட்ட சிந்தனைக் குழுவான மேகாவதி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.[6]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7e/Dr._Siti_Musdah_Mulia_of_Indonesia%2C_2007_International_Women_of_Courage_Award.jpg)