சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் குடியரசின் உச்ச நீதிமன்றம்[2] சிங்கப்பூரில் உள்ள நீதிமன்ற அமைப்பின் இரண்டு அடுக்குகளில் ஒன்றாகும், மற்றொரு அடுக்கானது மாநில நீதிமன்றங்கள் ஆகும்.[3]
சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் | |
---|---|
உச்ச நீதிமன்றத்தின் புதிய கட்டிடம் 2005 ல் திறக்கப்பட்டது. வடிவமைத்தவர் நார்மன் பாஸ்டர் | |
நிறுவப்பட்டது | 9 ஜனவரி 1970[1] |
புவியியல் ஆள்கூற்று | 1°17′25.8″N 103°51′2.88″E |
நியமன முறை | சிறப்பு தேர்வு |
அதிகாரமளிப்பு | சிங்கப்பூர் அரசியலமைப்பு |
நீதியரசர் பதவிக்காலம் | 65 வயதுவரை. (மறுமுறையும் நியமிக்கப்படலாம்) |
வலைத்தளம் | www.supremecourt.gov.sg |
சிங்கப்பூரின் தலைமை நீதிபதி | |
தற்போதைய | சுந்தரேஷ் மேனன் |
பதவியில் | 6 நவம்பர் 2012 |
சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் என்பது மேல்முறையீட்டு நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கியது. அத்துடன் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளையும் கேட்கிறது. மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் இருந்து தாக்கலாகும் சிவில் மற்றும் கிரிமினல் மேல்முறையீடுகளை கேட்கிறது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக உயர்நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட சட்டம் சார்ந்த சங்கதியையும் தீர்மானிக்கலாம். அதே போல் ஒரு கீழமை நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யும்போது எழும் பொது நலன் குறித்த சங்கதிகளை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்காக ஒதுக்கும் போது, அந்த சங்கதியையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கலாம்.[4]
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு பின்வருமாறு: பொதுவாக, உரிமைகோரல் வழக்குகளின் மதிப்பு 250,000 சிங்கப்பூர் டாலரைஐத் தாண்டினால் உயர் நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு தொடங்கப்படுகிறது. எஸ்டேட் மதிப்பு 3 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமாக இருந்தால் அல்லது வழக்கு ஒரு வெளிநாட்டு மானியத்தை மறுபடியும் மறுபரிசீலனை செய்தால், உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தீர்க்கப்படுகின்றன. கூடுதலாக, 1.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட குடும்ப நடவடிக்கைகளில் துணை விஷயங்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.[5]
மரணதண்டனை விதிக்கும் குற்றங்கள் மற்றும் பொதுவாக பத்து வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்படுகின்றன. ஜாமீனில் வெளிவராத குற்றங்கள் பொதுவாக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. ஏற்க்கப்படும் விதியாக, சிங்கப்பூரில் உள்ள உயர்நீதிமன்றம் சிங்கப்பூருக்குள் எழும் அனைத்து விஷயங்களையும் விசாரிக்க இயல்பான அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[6]