சாலியம்
கேரளாவிலுள்ள ஒரு கிராமம் / From Wikipedia, the free encyclopedia
சாலியம் (Chaliyam) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சாலியாற்றின் (பேப்பூர் ஆறு) கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். சாலியம் ஒரு தீவை உருவாக்குகிறது. இது வடக்கில் சாலியாறு, தெற்கில்கடலுண்டி ஆறு, கிழக்கில் கொனோலி கால்வாய் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது பேப்பூர் துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. சாலியம் (பேப்பூர் தொடர் வண்டி நிலையம்) சென்னை தொடர் வண்டிபாதையின் தென்மேற்கு முனையமாக இருந்தது. கைகளையும் கால்களையும் கயிறுகளால் கட்டிக்கொண்டு சாலியாற்றின் ஏழு கி.மீ தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனைகள் படைத்த முகம்மது ஆதில் இப்பகுதியைச் சேர்ந்தவர்.[1]
விரைவான உண்மைகள் சாலியம், நாடு ...
சாலியம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11.15592°N 75.80824°E / 11.15592; 75.80824 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மாவட்டம் |
வட்டம் | கோழிக்கோடு |
வட்டார ஒன்றிய அலுவலகம் | கோழிக்கோடு |
தொலைபேசி இணைப்பு எண் | 0495 |
அஞ்சல் குறியீடு | 673301 |
மக்களவைத் தொகுதி | கோழிக்கோடு |
மூடு