சாலிகுண்டம்
From Wikipedia, the free encyclopedia
சாலிகுண்டம் (Salihundam,) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும்.[1] மலையில் உள்ள இக்கிராமம், வம்சதாரா ஆற்றின் தென் கரையில் உள்ளது. சிறீகாகுளம் நகரத்திலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் சாலிகுண்டம், நாடு ...
சாலிகுண்டம் | |
---|---|
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம் | |
ஆள்கூறுகள்: 18°20′00″N 84°03′00″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சிறீகாகுளம் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 532405 |
அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |
மக்களவைத் தொகுதி | சிறீகாகுளம் |
சட்டமன்றத் தொகுதி | சிறீகாகுளம் |
மூடு
1919ல் சாலிகுண்டம் கிராமத்தை அகழாய்வு செய்த போது, நான்கு பௌத்த தூபிகளும், விகாரைகளும், பௌத்த நினைவுப் பொருட்கள் கொண்ட பேழைகளும், பௌத்த சமய தேவதைகளான தாரா உள்ளிட்ட சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.[2] இவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ஜிராயனப் பௌத்தப் பிரிவுகளைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவைகள் ஆகும்.