சாட்சாரி தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
சாட்சாரி தேசியப்பூங்கா (Satchari National Park) வங்காளதேசத்தில் ஹபிகாஞ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பின்னர் 243 ஹெக்டேர்கள் (600 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. சாட்சாரி எனும் வங்காளச் சொல்லுக்கு ஏழு ஓடைகள் என்று பெயர். [1]இந்த வனப்பகுதியில் 7 ஓடைகள் செல்வதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இந்தப்பூங்கா ரகுநந்தன் மலையில் அமைந்துள்ளது.[2] இது வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து 130 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே உள்ள திப்ரா கிராமத்தில் 24 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கே 9 தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. அரசுடன் இணைந்து நிஷர்கா எனும் தன்னார்வ அமைப்பும் இந்தப்பூங்காவை பராமரிக்கின்றனர். இங்கே சுற்றுச் சூழல் சுற்றுலாவும் நடத்துகின்றர்.
விரைவான உண்மைகள் சாட்சாரி தேசியப் பூங்கா, அமைவிடம் ...
சாட்சாரி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | ஹபிகாஞ் , வங்காளதேசம் |
பரப்பளவு | 243 ha (600 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | 2005 |
மூடு