சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி
From Wikipedia, the free encyclopedia
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி (Bank for International Settlements) என்பது சுவிட்சர்லாந்து பேசெல் நகரில் 17ம் தேதி மே மாதம் 1930 முதல் இயங்கிவரும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இந்த அமைப்பு உலகில் உள்ள அனைத்து நடுவண் வங்கி வங்கிகளுக்கும் உற்ற துணைவனாக விளங்குகிறது. அனைத்து வங்கிகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துதல், நிதி மற்றும் பணத்துறைகளில் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்கிறது. இவ்வகைச்செயல்களினால் அனைத்து வங்கிகளுக்கும் இந்த நிறுவனம் நடுவண் வங்கி என்று அழைக்கப்படுகிறது.[2]
நிறுவப்பட்டது | 17 மே 1930 |
---|---|
வகை | சர்வதேச அமைப்பு |
நோக்கம் | மத்திய வங்கி ஒத்துழைப்பு |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | 60 மத்திய வங்கிகள் |
General manager | Jaime Caruana |
மைய அமைப்பு | இயக்குநர் குழுமம்[1] |
வலைத்தளம் | www.bis.org |
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி நடுவண் வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்து கூறுகிறது. சுவிட்சர்லாந்து பேசெல் நகரைத் தலைமையிடமாக கொண்டிருந்தாளும் இந்த அமைப்பின் பிரதிநிதி அலுவலகங்கள் ஆங்காங், மற்றும் மெக்சிக்கோ நகரம் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளது.