சரு மரு
From Wikipedia, the free encyclopedia
சரு மரு (Saru Maru) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள பான்கோராரியா எனும் கிராமத்தில் உள்ள மலையில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும். இம்மலையில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டும், சிதிலமடைந்த தூபிகளும், பிக்குகள் தங்கும் குடைவரைகளும் கொண்டுள்ளது.[1][2]இத்தொல்லியல் களம் சாஞ்சி]]க்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பௌத்த தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுப்பயணத்தின் போது பேரரசர் அசோகர் இவ்விடத்திற்கு வருகை தந்தார். எனவே அசோகர் இவ்விடத்தில் நிறுவிய சிறு பாறைக் கல்வெட்டில் தனது சிறப்புப் பெயர்களான பியாதாசி (Piyadasi) (பிரியதர்சி) என்றும் ராஜகுமாரன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவான உண்மைகள் சரு மரு, ஆயத்தொலைகள் ...
சரு மரு | |
---|---|
சரு மருவினி சிதைந்த தூபி | |
ஆயத்தொலைகள் | 22.729949°N 77.519910°E / 22.729949; 77.519910 |
வகை | தூபிகள், அசோகரின் கல்வெட்டு, குடைவரைகள் |
மூடு