From Wikipedia, the free encyclopedia
சரளா தாசன் (Sarala Dasan) இவர் 15 ஆம் நூற்றாண்டின் கவிஞரும் ஒடியா இலக்கிய அறிஞருமாவார். மகாபாரதம் விலங்க ராமாயணம் மற்றும் சண்டி புராணம் ஆகிய மூன்று ஒடியா புத்தகங்களுக்கு மிகவும் பிரபலமானவர். [1]இதை ஒடியாவில் எழுதிய முதல் அறிஞருமாவார். ஒடியா இலக்கியத்தைத் தோற்றுவித்தவர் என்ற வகையில், இவரது படைப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கான ஒரு நீடித்த தகவலை உருவாக்கியுள்ளன.
சரளா தாசன் | |
---|---|
பிறப்பு | சித்தேசுவர பரிதா 15ஆம் நூற்றாண்டு தென்துலிபதா, ஜகத்சிம்மபூர் மாவட்டம் |
இறப்பு | மகா சுக்லா சப்தாமி |
பணி | கவிஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சரளா மகாபாரதம் |
சரளா தாசனின் வாழ்க்கை தெளிவற்றது. இந்திய மாநிலமான ஒடியாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள சித்திகேத்திரங்களில் ஒன்றான கனகபுரா என்று அழைக்கப்படும் கனகவதி படானாவில் பிறந்தார். இவர் பிறந்த தேதியை துல்லியமாக தீர்மானிக்க முடியாது என்றாலும், இவரை கி.பி 15 ஆம் நூற்றாண்டில் வைக்க முடியும்.
சரளா தாசனுக்கு முறையான ஆரம்பக் கல்வி இல்லை. சுய கல்வியின் மூலம் இவர் அடைந்த காரியம், பக்தி மற்றும் உத்வேகத்தின் தெய்வமான சரளாவின் கிருபையால் கூறப்பட்டது. இவரது ஆரம்ப பெயர் சித்தேசுவர பரிதா என்றாலும், பின்னர் இவர் சரளா தாசன் அல்லது ' சரளாவின் வரத்தால் ' அறியப்பட்டார். ( தாசன் என்ற தலைப்பு ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது தெய்வத்தின் அடிமை அல்லது வேலைக்காரன் என்று பொருள். சரளா தாசனுக்கு முன்னும் பின்னும் வந்த கவிஞர்களின் நீண்ட பட்டியலில் இந்த வழியில் முடிவடையும் பெயர்கள் உள்ளன. உதாரணமாக: வத்ரா தாசன், மார்க்கந்தா தாசன், சரளா தாசன், ஜெகந்நாத தாசன், பலராம தாசன், மற்றும் யசோவந்த தாசன். ) சரசுவதி தெய்வம் உதவி செய்யும் வரை ஆரம்பகால வாழ்க்கையில் கல்வியறிவற்றவர் எனக் கூறப்படும் காளிதாசன் போன்ற பிற இந்தியக் கவிஞர்களைப் போன்ற கதைகள் இவருக்கும் உண்டு. சித்தேசுவரன் ஒரு சிறுவனாக ஒரு காலத்தில் தனது தந்தையின் வயலை உழுது கொண்டும், பாடிக்கொண்டும் இருந்ததாகக் கூறுகிறது. அழகான கவிதைகளை இயற்றுவதற்கான சக்தியை இவருக்கு சரளா வழங்கினார்.
ஒடியாவின் கஜபதி மன்னரின் இராணுவத்தில் இவர் ஒரு சிப்பாயாக பணியாற்றினார் என்பதற்கு அவரது மகாபாரதத்தில் பல அறிகுறிகள் உள்ளன.
சரளா தாசன் தனது கடைசி நேரத்தை பிலா சரளாவில் கழித்தார். ஆனால் தென்தூலியபாடாவில் கனகபுரா என்று அழைக்கப்படும் கனகவதி படனா, முனிகோஸ்வைன் என்று அழைக்கப்படும் ஒரு மத ஸ்தாபனத்துடன் பாரம்பரிய இடமாகக் குறிக்கிறது. அங்கு இவர் தனது படைப்புகளை இயற்றினார். இவரது வாழ்நாளின் இந்த காலம் இடைக்காலம் என்று அழைக்கப்பட்டது.
மகாபாரதம், விலங்க ராமாயணம் மற்றும் சண்டி புராணம் - சரளா தாசன் ஆகிய மூன்று புத்தகங்களுக்கும் இவர் மிகவும் பிரபலமானவர். லட்சுமி நாராயண வச்சனிகா புத்தகத்தையும் எழுதினார். ஆதி பர்வ மகாபாரதம் புரியின் கடவுள் சகந்நாதருக்கு உரையாற்றிய ஒரு நீண்ட அழைப்போடு திறக்கிறது. இதிலிருந்து சரளா தாசன் தனது மகாபாரதத்தை கபிலேஸ்வரரின் காலத்தில் எழுதத் தொடங்கினார். ।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.