From Wikipedia, the free encyclopedia
சரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay [1], வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களை படைத்ததற்காக ரபீந்திரநாத் தாகூரால் பெரிதும் பாராட்டப் பெற்றார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஹவுரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதேர் தோபி(வழி வேண்டுவோர்) அக்கால புரட்சியாளர்களின் வேதப் புத்தகமாக கருதப்பட்டது. ஆங்கிலேய அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.
சரத்சந்திர சட்டோபாத்யாயா Sarat Chandra Chattopadhyay | |
---|---|
பிறப்பு | சரத்சந்திர சட்டோபாத்யாயா 15 செப்டம்பர் 1876 தேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம் |
இறப்பு | 16 சனவரி 1938 61) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை
புனைபெயர் | அனிலா தேவி |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
காலம் | 19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு |
வகை | புதின இலக்கியம் |
இலக்கிய இயக்கம் | வங்காள மறுமலர்ச்சி |
துணைவர் | சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி |
பிள்ளைகள் | ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு) |
’தேவதாஸ்’ எனும் கதையைப் பதினேழு வயதில் எழுதினார். இக்கதை பல மொழிகளிலும் மீண்டும் திரைவடிவம் பெற்றுவந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.