![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/ChandraguptaIIOnHorse.jpg/640px-ChandraguptaIIOnHorse.jpg&w=640&q=50)
சமுத்திரகுப்தர்
From Wikipedia, the free encyclopedia
சமுத்திரகுப்தர் , குப்தப் பேரரசை கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தர், இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் இந்து சமயம், கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் இரண்டாம் சந்திரகுப்தர், சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.
சமுத்திரகுப்தர் | |
---|---|
பேரரசர் | |
குப்த பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி பி 320– 380 |
முன்னையவர் | முதலாம் சந்திரகுப்தர் |
பின்னையவர் | இரண்டாம் சந்திரகுப்தர் |
துணைவர் | தத்த தேவி |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் சந்திரகுப்தர் என்ற இராமகுப்தர் |
மரபு | குப்த அரசமரபு |
தந்தை | முதலாம் சந்திரகுப்தர் |
தாய் | குமாரதேவி |
மதம் | இந்து சமயம் |
ஜாவா தீவின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.[1] சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு கடல் என்று பொருள். சமுத்திரகுப்தரை அசோகருக்கு நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையைப் போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.[2]
முதலாம் சந்திர குப்தருக்கும் - மகாஜனபாதங்களில் ஒன்றான லிச்சாவி இளவரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். பாடலி புத்திரத்தை தலைநகராகக் கொண்ட குப்தப் பேரரசை நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.