சந்திராவரம் பௌத்தத் தலம்
From Wikipedia, the free encyclopedia
சந்திராவரம் பௌத்தத் தலம் (Chandavaram Buddhist site) இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின், பிரகாசம் மாவட்டத்தில் சந்திராவரம் கிராமத்தில் உள்ளது. இப்பௌத்தத் தலம் கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.[2][3] குண்டலகம்மா ஆற்றின் கரையில், தோனகொண்டா இரயில் நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் சந்திராவரம் பௌத்தத் தொல்லியல் களம் உள்ளது. [4]
விரைவான உண்மைகள் சந்திராவரம் பௌத்தத் தலம், மாற்றுப் பெயர் ...
சந்திராவரம் பௌத்தத் தலம் | |
---|---|
மாற்றுப் பெயர் | சந்திராவரம் தொல்லியல் களம் |
இருப்பிடம் | சந்திராவரம் கிராமம் |
பகுதி | ஆந்திரப் பிரதேசம் |
ஆயத்தொலைகள் | 15°55′58.5156″N 79°25′40.2240″E |
வகை | பௌத்தத் அகழ்வாய்ராச்சிக் களம் |
வரலாறு | |
கட்டுநர் | சாதவாகனர்கள்[1] |
கட்டுமானப்பொருள் | செங்கல் & சுண்ணாம்பு |
கட்டப்பட்டது | கிமு இரண்டாம் நூற்றாண்டு |
கலாச்சாரம் | பௌத்தப் பண்பாடு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1964 |
அகழாய்வாளர் | முனைவர். வெலெரி வெங்கட கிருஷ்ண சாஸ்திரி |
நிலை | மறுசீரமைக்கப்பட்டது |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | ஆம் |
மூடு
கிமு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மையப்பகுதிகளை சாதவாகனர்கள் ஆட்சி செய்த காலத்தில் நிறுவப்பட்ட சந்திராவரம் பௌத்த தொல்லியல் களத்தை, முனைவர். வெலூரி வெங்கட கிருஷ்ண சாஸ்திரி என்பவர் 1964ல் கண்டுபிடித்தார்.[1][2][5]