![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/Golconda_Fort_005.jpg/640px-Golconda_Fort_005.jpg&w=640&q=50)
கோல்கொண்டா கோட்டை
From Wikipedia, the free encyclopedia
கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும்.[1] இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்ட கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.
கோல்கொண்டா | |
---|---|
![]() கோல்கொண்டா கோட்டை | |
பொதுவான தகவல்கள் | |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1600கள் |
வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.
இவர்கள் தெலுங்கானா மற்றும் இன்றைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா[2] மாநிலங்களின் சில பகுதிகளை ஆண்டனர்.