கோமதீஸ்வரர் சிலை
From Wikipedia, the free encyclopedia
கோமதீஸ்வர் சிலை (Gommateshwara Statue) 57 அடி உயரம் கொண்ட ஒரே கருங்கல்லால் வடிக்கப்பட்டது. அருகதரான பாகுபலிக்குப் அர்ப்பணிக்கப்பட்ட கோமதீஸ்வரர் எனும் பெயர் கொண்ட இச்சிலை, கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டதிலுள்ள விந்தியகிரி மலையடிவாரத்திலுள்ள திகம்பர சமண சமய மையங்கள் அதிகம் கொண்ட சரவணபெலகுளா எனுமிடத்தில் அமைந்துள்ளது. மேலைக் கங்க மன்னரின் படைத்தலைவரும், அமைச்சருமான சந்திரராயன் என்பவரால், இச்சிலை கி பி 983ல் நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் கோமதீஸ்வர பாகுபலி, அடிப்படைத் தகவல்கள் ...
கோமதீஸ்வர பாகுபலி | |
---|---|
57 அடி உயர கோமதீஸ்வரரின் ஒற்றைக்கல் சிற்பம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சரவணபெலகுளா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 12.854026°N 76.484677°E / 12.854026; 76.484677 |
சமயம் | சமணம் |
மூடு
கோதீஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகாஅபிசேகத்தின் போது உலகம் முழுவதிலிருந்து பக்தர்கள் இங்கு கூடுவர்.[1] [2] குடமுழுக்கின் போது கோமதீஸ்வரர் சிலைக்கு நீர், பால், தயிர், சந்தனம், குங்குமப்பூ, குங்குமம் மற்றும் இளநீரால் அபிசேகம் செய்யப்படுகிறது.