கொள்ளு
From Wikipedia, the free encyclopedia
கொள்ளு/கொள் (Macrotyloma uniflorum) என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். இதன் சிறப்பை இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.
கொள்ளு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
குடும்பம்: | ஃபேபேசியே |
பேரினம்: | மேக்ரோடைலோமா |
இனம்: | எம். யுனிஃபுளோரம் |
இருசொற் பெயரீடு | |
Macrotyloma uniflorum (Lam.) Verdc. | |
இதற்கு ஆங்கிலத்தில் ஆர்ச் க்ராம் என விளிப்பர். அதற்குக் காரணம் இப்பயறு பண்டுக் காலத்தில் குதிரைக்கு தீவணமாகக் கொடுத்து வந்தனர். இதற்கு மலையாளத்தில் மூதிரா எனவும் தெலுங்கில் உலாவாலு என வேறு பெயர்கள் இட்டு கூப்பிடுகின்றனர். இதைத் தவிர்த்து இந்தியில் குல்தி, அரபியில் அபுல் குல்த், சமஸ்கிருதத்தில் குளதா களை, சீன மொழியில் பியான் டௌ என உலகு முழுதும் அழைக்கின்றனர். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.