கொடும்பாவி எரித்தல்
பிடிக்காத ஒருவரை உருவகப்படுத்தி செய்யப்படும் உருவ பொம்மை / From Wikipedia, the free encyclopedia
கொடும்பாவி கொளுத்துதல் (Effigy) என்பது ஒரு குறிப்பிட்ட மனிதரை உருவகப்படுத்தும் விதமாக முழு உருவ பொம்மையை எரித்தல் ஆகும்.[1] அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் தாங்கள் எதிர்க்கும் மனிதருக்கு குறியீட்டுத் தண்டனைக் கொடுக்க பயன்படுத்தப்படும் தற்காலிக பொம்மைகளும், சமய விழாக்களை ஒட்டி மரபாக எரிக்கப்படும் உருவங்களும் கொடும்பாவி என்று பொதுவாக அழைக்கபடுகிறன்றன. ஐரோப்பிய பண்பாட்டில், கடந்த காலங்களில், நீதித் துறையால், குற்றவாளியைக் முறையாக கைது செய்ய முடியாதபோதும், சமூக அவமானம் மற்றும் ஒதுக்கிவைக்கும் பரவலான நீதி நடைமுறைகளிலும் கொடும்பாவிகள் பயன்படுத்தப்பட்டன.
வட இந்தியாவில், பாரம்பரியமான இராமலீலை விழாவின் ஒரு பகுதியாக பத்து தலை இராவணனின் மிகப் பெரிய உருவத்தை வட இந்தியாவில் எரிக்கின்றனர். மெக்சிகோவிலும். அமெரிக்காவிலும் அரசியல்வாதிகளை சித்தரிக்கும் விதமாக கொடும்பாவி மொம்மைகளை போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அடிக்கின்றனர்.[2]