கேப்ரியல் சூறாவளி
2022–23 ஆத்திரேலியா மண்டலம் மற்றும் தென் பசுபிக் சூறாவளிப் பருவத்தின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
கேப்ரியல் சூறாவளி (Cyclone Gabrielle) 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து மற்றும் நோர்போக்கு தீவை தாக்கியது. கடுமையான வெப்பமண்டல சூறாவளியான கேப்ரியலின் தாக்குதலால் நியூசிலாந்தில் குறைந்தது 46,000 வீடுகள் மின்சாரத்தை இழந்தன. கனமழை மற்றும் காற்று வீசும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த காரணத்தால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில பகுதிகளில் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது. கேப்ரியல் புயல், வடக்கு தீவுக்கு அருகில் நிலைக்கொண்டிருந்ததால், சில பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.[1] ஆக்லாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வரலாறு காணாத மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தால் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகின.
Category 3 severe tropical cyclone (Aus scale) | |
---|---|
Category 2 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
கடுமையான வெப்பமண்டல சூறாவளி கேப்ரியல் பிப்ரவரி 10 அன்று அதன் உச்ச தீவிரத்திற்கு அருகாமையில் உள்ளது | |
தொடக்கம் | 6 பிப்ரவரி 2023 |
மறைவு | தற்போது செயலில் உள்ளது |
உயர் காற்று | 10-நிமிட நீடிப்பு: 150 கிமீ/ம (90 mph) 1-நிமிட நீடிப்பு: 165 கிமீ/ம (105 mph) |
தாழ் அமுக்கம் | 958 hPa (பார்); 28.29 inHg |
சேதம் | அறியப்படவில்லை $ |
பாதிப்புப் பகுதிகள் | பிரதானமாக நியூசிலாந்து மற்றும் நோர்போக் தீவு |
2022–23 ஆத்திரேலியா மண்டலம் மற்றும் தென் பசுபிக் சூறாவளிப் பருவத்தின் ஒரு பகுதி-இன் ஒரு பகுதி | |
2022-23 ஆம் ஆண்டின் ஆத்திரேலிய மண்டல சூறாவளி பருவத்தின் ஐந்தாவது பெயரிடப்பட்ட புயலாகவும் 2022-23 தென் பசிபிக் சூறாவளி பருவத்தின் முதல் கடுமையான வெப்பமண்டல சூறாவளியாகவும் இப்புயல் கருதப்படுகிறது. சாலமன் தீவுகளுக்கு தெற்கே நிலைகொண்டிருந்த போது, பிப்ரவரி 6 அன்று கேப்ரியல் முதலில் ஒரு வளரும் வெப்பமண்டல தாழ்வு நிலையாகக் குறிப்பிடப்பட்டது. வெப்பமண்டல சூறாவளி என வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு ஆத்திரேலிய வானிலை ஆய்வு மையம் இதற்கு கேப்ரியல் என்று பெயரிட்டது. இந்தச் சூறாவளி தெற்கு பசிபிக் படுகையில் நகர்வதற்கு முன், 3 ஆம் வகை கடுமையான வெப்பமண்டல சூறாவளியை அடைந்தது. பின்னர் பிப்ரவரி 11 இல் ஒரு துணை வெப்பமண்டல தாழ்வு நிலையாக விரைவாக சிதைந்தது.
நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழை மற்றும் காற்று எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில், கேப்ரியல் நெருங்கி வந்ததால் நோர்போக் தீவு சிவப்பு எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. 2023 வடக்குத் தீவு வெள்ளத்தின் விளைவாக ஆக்லாந்து மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏற்கனவே இருந்த அவசர நிலைகள் நீட்டிக்கப்பட்டன. மேலும் பிற பகுதிகளில் புதிய அவசரகால நிலைகள் அறிவிக்கப்பட்டன. பிப்ரவரி 12 அன்று நியூசிலாந்து நாடு கேப்ரியல் சூறாவளியின் விளைவுகளை உணரத் தொடங்கியது. அதன் தாக்கம் மேலும் தொடர்ந்து, பிப்ரவரி 14 அன்று நாட்டில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது.