கேதார்நாத் கோயில்
From Wikipedia, the free encyclopedia
கேதார்நாத் கோயில் (Kedarnath Temple) இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,[1] கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.[2] கேதார்நாத் கோயில், பஞ்ச கேதார தலங்களுல் ஒன்றாகும்.
தேவாரம் பாடல் பெற்ற கேதார்நாத் கோயில் | |
---|---|
கோயில் நுழைவாயில் விமானம் | |
புவியியல் ஆள்கூற்று: | 30.73°N 79.07°E / 30.73; 79.07 |
பெயர் | |
பெயர்: | கேதார்நாத் கோயில் |
தேவநாகரி: | केदारनाथ मन्दिर |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | केदारनाथः |
ஆங்கிலம்: | Kedarnath Temple |
வங்காளம்: | কেদারনাথ মন্দির |
அமைவிடம் | |
ஊர்: | கேதார்நாத் |
மாவட்டம்: | ருத்ரபிரயாக் |
மாநிலம்: | உத்தராகண்ட் |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கேதாரீஸ்வரர் (சிவன்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
வரலாறு | |
நிறுவிய நாள்: | பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | ஆதி சங்கரர் |
வலைதளம்: | http://www.badarikedar.org/kedarnath.aspx/ |
இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இது சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
கேதார்நாத், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிப்படைந்தது. கோயிலைச் சுற்றி இருக்கும் நகர்ப்புரங்கள் பெரும் சேதமடைந்தாலும், கோயில் வளாகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.[3]