குற்றால அருவிகள்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள அருவிகள் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை குற்றாலம் அருவிகளைப் பற்றியது. இதே பெயரில் உள்ள பேரூராட்சி பற்றி அறிய குற்றாலம் கட்டுரையைப் பார்க்க.
குற்றால அருவிகள் என்பன இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" (ஆரோக்கிய நீருற்று) என்றழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் குற்றால அருவிகள், அமைவிடம் ...
குற்றால அருவிகள் | |
---|---|
அமைவிடம் | குற்றாலம், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு |
வகை | Segmented Plunges |
மொத்த உயரம் | 167 m (548 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | ஒன்பது |
நீர்வழி | சிற்றாறு |
மூடு
மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.
குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
அருவிக்கரையில், குற்றாலநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.