குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
தமிழகத்தின் உள்ள நீலகிரிமாவட்டத்தில் அமைந்துள்ள குந்தா நீர்மின்னாக்கத் திட்டம், காமராசர் அரசால் நீலகிரி மலைகளிலிருந்து வரும் குந்தா ஆற்றில் கட்டப்பட்டது.[1] இத்திட்டத்தின் கீழ் ஐந்து மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் உற்பத்தியாகக் கூடிய மின்சக்தியின் மொத்த அளவு ஏறத்தாழ 500 மெகா வாட் ஆகும். ஒரு மெகாவாட் என்பது 10 இலட்சம் யூனிட்டுகளை கொண்டதாகும். கொழும்புத் திட்டத்தின்கீழ் இந்தியா, கனடா நாடுகளின் கூட்டுறவால் இப்பெரிய திட்டம்[2]உருப்பெற்றது.
இத்திட்டத்திற்காக கனடா அரசு 4.3 கோடி டாலர்கள் நிதி உதவி அளித்தது. கனடாவின் இவ்வுதவிக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் ஐந்து மின்னாக்க நிலையங்களுக்கும் கனடா மின்னாக்க நிலையங்கள் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]