குக்கரஅள்ளி ஏரி
From Wikipedia, the free encyclopedia
குக்கரஅள்ளி ஏரி (Kukkarahalli Lake) மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி கர்நாடக மக்களால் குக்கரஹள்ளி கெரெ என்று கன்னடத்தில் அழைக்கபடுகிறது. (கெரே என்றால் கன்னடத்தில் ஏரி என்று பொருள்) இந்த ஏரியானது மானசகங்கோத்திரி (மைசூர் பல்கலைக்கழகம்),[1] கலாமந்திர் (ரங்கயானா) மற்றும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஆகியவற்றை அடுத்துள்ளது. இது மைசூர் நகரின் இதயம் போன்றுள்ளது.
குக்கரஅள்ளி ஏரி | |
---|---|
அமைவிடம் | மைசூர் |
ஆள்கூறுகள் | 12.3°N 76.63°E / 12.3; 76.63 |
வகை | நன்னீர் ஏரி-மீன்பிடித்தல்-பொழுதுபோக்கு |
வடிநிலப் பரப்பு | 414 km2 (160 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 62 ha (150 ஏக்கர்கள்) |
அதிகபட்ச ஆழம் | 5 m (16 அடி) |
நீர்க் கனவளவு | 2.53×10 |
கரை நீளம்1 | 5 km (3.1 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 755.73 m (2,479.4 அடி) |
குடியேற்றங்கள் | மைசூர் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
இந்த ஏரி மூன்றாம்மும்மடி கிருஷ்ணராஜ உடையாரால் (1794–1868) உருவாக்கப்பட்டது. அவர் மைசூரை ஆண்டபோது இதனை 1864 இல் சுமார் 4000 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்களின் நீர்ப்பாசன வசதிக்காகத் தோற்றுவித்தார்.[2] இது மைசூர் நகர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இது பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. மைசூர் மக்கள் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளால் பாதுகாக்கப்படுகிறது. பறவைகளின் சரணாலயமாகவும் உள்ளது.