![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Royal_Standard_of_the_Sultan_of_Kelantan_%2528Sultan_Muhammad_V%2529.svg/langta-640px-Royal_Standard_of_the_Sultan_of_Kelantan_%2528Sultan_Muhammad_V%2529.svg.png&w=640&q=50)
கிளாந்தான் சுல்தான்
கிளாந்தான் மாநிலத்தின் அரசர் / From Wikipedia, the free encyclopedia
கிளாந்தான் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Kelantan; மலாய்: Sultan Kelantan Darul Naim) என்பவர் கிளாந்தான் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், கிளாந்தான் மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், கிளாந்தான் சுல்தான் என்பவர் கிளாந்தான் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார்.
கிளாந்தான் சுல்தான் Sultan of Kelantan Sultan Kelantan Darul Naim کلنتن دار النعيم سلطان | |
---|---|
![]() மாட்சிமிகு சுல்தான் ஐந்தாம் முகமது | |
வாரிசு தெங்கு முகமது பக்ரி பெத்ரா (Tengku Muhammad Fakhry Petra) | |
ஆட்சிக்காலம் | கிளாந்தான் சுல்தான் பதவியில்: (13 செப்டம்பர் 2010 - இன்று வரையில்) |
முடிசூட்டுதல் | 2010 |
முன்னையவர் | கிளாந்தான் சுல்தான் இசுமாயில் பெத்ரா |
பிறப்பு | 6 அக்டோபர் 1969 |
தந்தை | கிளாந்தான் இசுமாயில் பெத்ரா |
தாய் | தெங்கு ஆனிசு பிந்தி தெங்கு அப்துல் அமீது |
தற்போதைய சுல்தான் ஐந்தாம் முகமது 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார். இவர், கிளாந்தான் மாநிலத்தின் 29-ஆவது சுல்தான் ஆவார்.
இவர் 243-ஆவது மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில்; மலேசியாவின் 15-ஆவது பேரரசராக தேர்வு செய்யப்பட்டார். 13 டிசம்பர் 2016 தொடங்கி 6 சனவரி 2019 வரையில் மலேசிய அரசர் பதவியை வகித்தார். இருப்பினும் தனிப்பட்ட காரணங்களினால் அவர் 6 சனவரி 2019-இல் மலேசிய அரசர் பதவியை விட்டு விலகினார்.[1][2][3]