சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
கிரீஷ் ரகுநாத் கர்னாட் (Girish Raghunath Karnad, கன்னடம்: ಗಿರೀಶ್ ರಘುನಾಥ ಕಾರ್ನಾಡ್, 19 மே 1938 - 10 சூன் 2019)[1] என்பவர் கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். கன்னடத்திற்கான ஞானபீட விருதை இவர் பெற்றார்.[2]
கிரீஷ் கர்னாட் | |
---|---|
2009 இல் கர்னாட் | |
பிறப்பு | கிரீஷ் இரகுநாத் கர்னாட் 19 மே 1938 மதிரன், மும்பை மாகாணம் |
இறப்பு | 10 சூன் 2019 81) பெங்களூர் | (அகவை
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கர்நாடகா பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
பணி | நாடகாசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர் |
பிள்ளைகள் | ரகு கர்னாட் |
கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார். இவரது நாடகங்களில் பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை குறிக்க வரலாறு மற்றும் தொன்மவியலைப் பயன்படுத்துவார். இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன. ஒரு நடிகராக, இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் அவர் நிலைத்து நின்றார், இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கிரிஷ் கர்னாட், மகாராட்டிராவின் மாத்தெரானில், கொங்கனி பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது துவக்கப் பள்ளிப்படிப்பானது, மராத்தியில் இருந்தது. கர்னாட் இளைஞராக இருந்த காலத்தில், அவரது கிராமத்தில் நடத்தப்படும் யாக்ஷகானா என்னும் நாட்டுப்புற கலையின் தீவிரமான ஆர்வலராக இருந்தார்.[3]
1958 இல், தார்வார், கர்நாடக கல்லூரியில், இளங்கலைப் பட்டம் பெற்ற கர்னாடுக்கு, ஆக்ஸ்போர்டில் மேற்படிப்புக்கு நல்கை கிடைத்தது. இதனால் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார், (1960-63) ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் மற்றும் மக்டாலின் கல்லூரிகளில் கல்வி பயின்று, தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னையில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பதிப்பகத்தில் ஏழு ஆண்டுகள் (1963-70) பணிபுரிந்த பிறகு, அந்தப் பணியை விடுத்தார். புனே திரைப்படக் கல்லூரியியில் (1974-1975) இயக்குநராகவும், தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடெமியின் நிர்வாகத் தலைவராகவும் (1988-93) அவர் பணியாற்றினார். மேலும் 1976-1978 வரை, கர்நாடக நாடக அகாடமியின் தலைவராக பணியாற்றினார். 1987-88 ஆம் ஆண்டுகளின் போது, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகவும், பல்பிரைட் நாடக ஆசிரியராக தற்காலிக கெளரவப் பேராசிரியராகவும் இருந்தார். மிகவும் அண்மையில், இந்தியன் ஹை கமிசன், லண்டனில் (2000-03) நேரு மையத்தின் இயக்குநராகவும், கலாச்சார அமைச்சராகவும் பணியாற்றினார்.
கர்னாட், நாடக ஆசிரியராக மிகவும் புகழ்பெற்றார். கன்னடத்தில் எழுதப்பட்ட அவரது நாடகங்கள், ஆங்கிலத்தில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டன, மேலும் அதே போல் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது தாய் மொழியான கொங்கனியில் அல்லாமல் சர்வதேச இலக்கியப் புகழைப் பெறவேண்டும் என கனவுகளைக் கொண்டிருந்த கர்னாட் தன் நாடகங்களை, கன்னடத்தில் இயற்றினார். கர்னாட் கன்னடத்தில் நாடங்களை எழுதத் தொடங்கிய போது, கன்னட இலக்கியமானது, மேற்கத்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சி மூலமாக அளவு கடந்த தாக்கத்தைக் கொண்டிருந்தது. எழுத்தாளர்கள் தாய்மண்ணின் வெளிப்படுகைக்கு சம்பந்தம் இல்லாத பொருள்களையே தேர்ந்தெடுத்தனர்.
இதைப் போன்ற சூழ்நிலையில், இந்த தற்காலத்திய கருப்பொருள்களை சமாளிப்பதற்கு புதிய அணுகுமுறையாக வரலாற்று மற்றும் தொன்மவியல் மூலங்களை கர்னாட் உருவாக்கினார். அவரது முதல் நாடகம் "யயாதி" (1961) இல், மகாபாரத பாத்திரங்களின் வழியாக வஞ்சப்புகழ்ச்சிப் பாடுபவர்களின் வாழ்க்கை கேலி செய்யப்பட்டது, மேலும் இந்த நாடகம் உடனடி வெற்றியையும் பெற்றது. இதன் விளைவாக பல்வேறு பிற இந்திய மொழிகளிலும் விரைவாக மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அவரது சிறப்பாக போற்றப்பட்ட நாடகமான "துக்ளக்" (1964), நாட்டின் மிகவும் சிறந்த எதிர்காலமுள்ள நாடக ஆசிரியர்களில் ஒருவராக கர்னாட்டை அடையாளம் காட்டியது. கர்னாட், அவரது நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரது ஏராளமான கன்னட நாடகங்கள், டாக்டர் பார்கவி பீ. ராவ் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வம்சவிருக்ஷா மூலமாக கர்னாட் இயக்குநராக அறிமுகமானார், இது எஸ். எல். பைரப்பாவின் கன்னடப் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படம், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றது. அதற்கு முன்பு, யூ. ஆர். அனந்தமூர்த்தியின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான சம்ஸ்காரா வில் கர்னாட் நடித்தார், இத்திரைப்படத்தை பட்டாபிராம ரெட்டி இயக்கினார். இத்திரைப்படமானது, கன்னடத் திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருதை முதன்முறையாக வென்றது. பின்னர், கன்னடம் மற்றும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களை கர்னாட் இயக்கினார். தப்பலியூ நீனாடு மகனே , ஆண்டாண்டு காலதல்லி , செலுவி மற்றும் காடு உள்ளிட்ட அவரது சில புகழ்பெற்ற கன்னடத் திரைப்படங்களும் அடக்கமாகும்.
உத்சவ் , காட்ஹூலி மற்றும் அண்மைய புகார் அவரது இந்தித் திரைப்படங்களாகும். கர்னாட்டின் வெற்றித் திரைப்படமான கன்னூரு ஹெக்கதிதி படமானது கன்னட எழுத்தாளரான குவேம்புவின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். விப்புல் கே ராவல் மூலமாக மிகச்சிறந்த வகையில் எழுதப்பட்ட இக்பாலில் இரக்கமற்ற கிரிக்கெட் பயிற்சியாளராக கர்னாட்டின் பாத்திரமும் அவருக்கு விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. முகத்துதி பாடுபவர்களுக்கு சாதகமாக நிலைநாட்டிக்கொள்வதற்கு, வரலாற்றுக்கு உண்மையில்லாமல் இருப்பதற்காக, புகழ்பெற்ற நாவலாசிரியர் எஸ்.எல். பைரப்பா மூலமாக கர்னாட் விமர்சிக்கப்பட்டார். கர்னாட், முன்னணி நடிகர் அக்ஷய் குமாருடன் 8*10 டியாஸ்வீர் என்ற திரைப்படத்தில் நடித்தார்
கரடி டேல்ஸ் என்ற குழந்தைகளுக்கான பிரபலமான ஆடியோ புத்தகத் தொடரின் பல்வேறு கதைகளுக்காக, சூட்ராதராக (நிகழ்ச்சியுரையாளர்), கரடி பாத்திரத்துக்கு கர்னாட் குரல் கொடுத்தார். சர்கா ஆடியோபுக்ஸ் உருவாக்கிய அக்கினச் சிறகுகள் என்ற கலாமின் சுயசரிதத்தின் ஒலி நூலில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ஏ பீ ஜே அப்துல் கலாமின் குரலாக கர்னாட் ஒலித்தார்.
கர்னாட், டாக்டர் சரஸ்வதி கணபதியைத் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ஷல்மலி ராதா மற்றும் ரகு அமே என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5]
கிரிஷ் கர்னாட் தமது 81வது அகவையில் உடல்நலக் குறைவால் 10 சூன் 2019 அன்று மறைந்தார்[6]
Seamless Wikipedia browsing. On steroids.