கிம் சோங்-நம்
From Wikipedia, the free encyclopedia
கிம் சோங்-நம் (அங்குல் எழுத்துமுறை: 김정남; அஞ்சா: 金正男; 10 யூன் 1970 – 13 பிப்ரவரி 2017) 1994 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை வட கொரியாவின் தலைவராக இருந்த கிம் சோங்-இல் அவர்களின் மூத்த மகனாவார். 2001 வரை இவரே கிம் சோங் இல்லுக்கு அடுத்து ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.[1] தோக்கியோவின் டிசுனி லாண்டை பார்ப்பதற்காக போலி கடவுச்சீட்டு மூலம் சப்பானுக்குள் 2001 மே மாதம் நுழைய முயன்றது வெளிச்சத்துக்கு வந்து அதிக அளவில் மக்களால் பேசப்பட்டதால் இவர் தன் தந்தையின் ஆதரவை இழந்தார்.
கிம் சோங்-நம் | |
---|---|
김정남 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1970-06-10)10 சூன் 1970 பியொங்யாங், வட கொரியா |
இறப்பு | 13 பெப்ரவரி 2017(2017-02-13) (அகவை 46) செபாங், சிலாங்கூர், மலேசியா |
தேசியம் | வட கொரியன் |
அரசியல் கட்சி | Workers' Party of Korea |
துணைவர் | சிங் சோங்-குய் |
உறவுகள் | கிம் சோங்-இல் (தந்தை) சோங் கய்-ரிம் (தாய்) கிம் இல்-சங் (தாத்தா) கிம் சல்-சாங் (தந்தை வழி சகோதரி கிம் சோங்-உன் (தந்தை வழி சகோதரர்) கிம் சோங்-சல் (தந்தை வழி சகோதரர்) |
பிள்ளைகள் | கிம் ஆன்-சோல் உட்பட ஆறு |
வாழிடம் | மக்காவு |
முன்னாள் கல்லூரி | கிம் இல்-சங் பல்கலைக்கழகம் |
Military service | |
பற்றிணைப்பு | வட கொரியா |
கிளை/சேவை | கொரிய மக்கள் இராணுவம் |
அங்குல் எழுத்துக்கள் | 김정남 |
---|---|
Hancha | 金正男 |
McCune–Reischauer | Kim Chŏng-nam |
Revised Romanization | Gim Jeong-nam |
2003 முதல் கிம் சோங்-நம் வட கொரியாவை விட்டு வெளிநாட்டடில் வசித்து வருகிறார். இவரது தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவரும் இவரை விட இளையவருமான கிம் சோங்-உன் செப்டம்பர் 2010 அன்று அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார்.[2] வெளிநாட்டில் வசித்த போது இவர் சில முறை தங்கள் குடும்ப ஆட்சியை விமர்சனம் செய்த்தோடு சீர்திருத்தத்தை ஆதரிப்பவராக இருந்துள்ளார்.[3] பிப்ரவரி 2017 அன்று மர்மமான முறையில் மலேசியாவில் வானூர்தி நிலையத்தில் கிம் சோங்-நன் பெண்ணால் கொல்லப்பட்டார். கொல்வதற்கு விசம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஐயப்பாடு உள்ளது. வட கொரியாவின் ஆட்கள் (இரு பெண்கள்) இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது.