![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Crowds_in_front_of_Kabul_International_Airport.jpg/640px-Crowds_in_front_of_Kabul_International_Airport.jpg&w=640&q=50)
காபூலின் வீழ்ச்சி, 2021
From Wikipedia, the free encyclopedia
ஆப்கானித்தான் தலைநகர் காபூல் 2021 ஆகத்து 15 அன்று தாலிபான் படையினரால் கைப்பற்றப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:00 மணியளவில், அரசுத்தலைவர் அசரப் கனி தனது முகநூலில் "ஒரு இரத்தக்களரிப் போரைத் தவிர்ப்பதற்காகத் தாம் வெளியேறுவதாகவும், தாலிபான்கள் தங்கள் வாள்கள், துப்பாக்கிகளின் தீர்ப்பால் வெற்றி பெற்றனர்" என்றும் பதிவிட்டார்.[6] காபூலின் வீழ்ச்சி ஆப்கானித்தான் அரசுக்கு எதிராக 2021 மே மாதத்தில் தொடங்கிய இராணுவத் தாக்குதலின் உச்சம் ஆகும். அசரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காபூல் நகரம் கைப்பற்றப்பட்டது. 2020 பெப்ரவரி 29 இல் தொடங்கிய அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை அடுத்து ஆப்கானித்தானின் பெரும்பாலான மாகாணத் தலைநகரங்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. அமெரிக்கப் படைகள் 2021 ஆகத்து 31 இற்குள் முழுமையாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[7]
காபூலின் வீழ்ச்சி Fall of Kabul |
|||||||
---|---|---|---|---|---|---|---|
![]() |
|||||||
|
தாலிபான் பிரதிநிதிகளுக்கும் ஆப்கானித்தான் அரச அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் நிபந்தனையற்ற சரணடைதலுக்குக் குறைவான எந்த முடிவுக்கும் வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.[8][9][10] அமைதியான அதிகாரப் பரிமாற்றமே தாலிபான்களால் கோரப்பட்டது,[10] அரசாங்கம் இதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அதே வேளையில், ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற அது விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.[11] சில நேட்டோ படைகள் தங்களுடைய நாடுகளின் குடிமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றன.[12]