காந்தப் புலம்
From Wikipedia, the free encyclopedia
காந்தப் புலம் (magnetic field) என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள காந்தப் புலம் திசையாலும் வலிமை (பருமை)யாலும் குறிப்பிடப்படுகிறது; எனவே இது ஒருநெறியப் புலமாகும்.[nb 1] இந்தச் சொல் B H ஆகிய இரு குறியீடுகளால் குறிக்கப்படும் இருவகைப் புலங்களுக்குப் பயன்படுகிறது. இங்கு, H ஆம்பியர்/மீட்டர் அலகால் அளக்கப்படுகிறது. செப (SI) அலகில் இதன் குறியீடு: A m−1 அல்லது A/m) aagum . B தெசுலா அலகால் அளக்கப்படுகிறது. தெசுலாவின் குறியீடு T ஆகும். செப (SI) அலகில் இதன் குறியீடு நியூட்டன்கள்/மீட்டர்/ஆம்பியர் ஆகும். இதன் குறியீடு: N m−1A−1 அல்லது N/(mA)) ஆகும். B , பெரும்பாலும் நகரும் மின்னூட்டங்கள்பாலான இலாரன்சு விசையால் வரையறுக்கப்படுகிறது.
நகரும் மின்னூட்டங்களால் காந்தப் புலங்கள் உருவாகலாம். அடிப்படைத் அணுவகத்துகள்களின் இயல்புக் காந்த்த் திருப்புமைகள் அவற்றின் அடிப்படைக் குவைய இயல்பான தற்சுழற்சியுடன் அமைகின்றன.[1][2]> சிறப்பு சார்பியலில், காந்த, மின் புலங்கள் ஒரே நிகழ்வின் சார்புள்ல இருவேறு கூறுபாடுகள் ஆகும். இது மின்காந்த மீநெறியம் எனப்படுகிறது; இந்த மீநெறியம் மின், காந்தப் புலங்களாகப் பிரிதல் மின்னூட்டத்துக்கும் நோக்கீட்டாளருக்கும் இடையிலான சார்பு விரைவைப் பொறுத்ததாகும். குவைய இயற்பியலில், மின்காந்தப் புலம் குவையப்படுகின்றது. ஒளியன்களின் பரிமாற்றத்தால் மின்காந்த இடைவினை விளைகிறது.
அன்றாட வாழ்வில், நிலைக்காந்தங்கள் உருவாக்கும் விசைகளாக எதிர்கொள்லப்படுகின்றன. காந்த விசை. இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் காந்தங்களை ஈர்க்கின்றன. இது பிற காந்தங்களை ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது.
அண்மைத் தொழில்நுட்பத்தில், குறிப்பாக மின்பொறியியலிலும் மின்னியக்கவியலிலும் காந்தப் புலங்கள் பரவலாகப் பயன்படுகின்றன. புவி காந்தப் புலத்தை உருவாக்குகிறது. இது நாவாயோட்டப் பெரிதும் பயன்படுகிறது. இது புவி வளிமண்டலத்தைச் சூரியச் சூறாவளியில் இருந்து காக்கிறது. சுழல்காந்தப் புலங்கள் மின்னாக்கி அல்லது மின்னியற்றியிலும் மின்னோடி அல்லது மின்னியக்கியிலும் பயன்படுகின்றன. ஃஆல் விளைவால் காந்த விசைகள் பொருளில் உள்ள மின்னூட்ட ஏந்திகள் அல்லது ஊர்திகளைப் பற்றிய தகவலை அறிய உதவுகின்றன. மின்மாற்றிகளில் நிகழ்வதைப் போல மின்கருவிகளில் காந்தப் புலங்களின் இடைவினை காந்தச் சுற்றதர்களின் துறையில் ஆயப்படுகின்றன.