![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Lovelocks_on_pont_des_Arts%252C_Paris.jpg/640px-Lovelocks_on_pont_des_Arts%252C_Paris.jpg&w=640&q=50)
காதல் பூட்டு
From Wikipedia, the free encyclopedia
காதல் பூட்டு (ஆங்கிலம்: Love lock அல்லது Love padlock) என்பது காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதை பாலம், வேலி, வாயில், போன்ற பொது இடத்தில் பூட்டுவது ஆகும் [1] பொதுவாகப் பெயர்கள் அல்லது முதலெழுத்துகளை பூட்டில் எழுதிவிட்டு அப்பூட்டை பொதுஇடத்தில் பூட்டியபின் அதன் திறவுகோலை எங்காவது எறிந்துவிடுவர். பிறகு அந்தத் திறவுகோலைக் கண்டுபிடித்தால்தான் பூட்டைத் திறக்க முடியும் இதனால் தங்கள் காதல் உடையாது என்பது ஒரு நம்பிக்கை ஆகும். 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து, இந்த காதல் பூட்டுகள் பழக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்தது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Lovelocks_on_pont_des_Arts%2C_Paris.jpg/640px-Lovelocks_on_pont_des_Arts%2C_Paris.jpg)
இப்படி பூட்டு மாட்டும் நம்பிக்கை பாரீஸ், ரோம், செர்பியா, உருகுவே, தைவான், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளது.