![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Sprayed_weeds.jpg/640px-Sprayed_weeds.jpg&w=640&q=50)
களைக்கொல்லி
From Wikipedia, the free encyclopedia
களைக்கொல்லி (Herbicide) தேவையற்ற தாவரங்களை அழிப்பதற்குப் பயன்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். .[1] தெரிவுசெய்த களைக்கொல்லிகள் குறிப்பிட்ட களைகளைக் கட்டுபடுத்தி தேவையான பயிர் வகைகளுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால் வணிகமுறையில் பயன்படுத்தும் தெரிவுசெய்யாத களைக்கொல்லிகள் முற்றழிப்புக் களைக்கொல்லிகள் களைகளின் வளர்ச்சியைச் சிதைப்பதன்மூலம் செயல்படுகின்றன. இவை பொதுவாகத் தாவர வளரூக்கிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவை குறிப்பிட்ட தாவரங்களை மட்டுமன்றி அதன் தொடுகைக்கு உட்படும் எல்லாத் தாவரங்களையுமே அழித்து விடுகின்றன. தரிசு இவ்வாறான களைக்கொல்லிகள் நிலங்களைத் தூய்மைபடுத்துவதற்கும் நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள் போன்றவற்றின் பேணுதலுக்கும் அதாவது முழுமையான தாவரவளர்ச்சிக் கட்டுப்பாடு தேவையான இடங்களில் எல்லாம் பயன்படுகின்றன. தெரிவு செய்த, தெரிவு செய்யாத வகைகளைத் தாண்டி, எஞ்சியிருக்கும் வரை செயல்படும் வகையும் உட்கொள்நிலைசார்ந்து செயல்படும் வகையும் இயங்குமுறை சார்ந்து செயல்படும் வகையும் என மூவகைகள் உள்ளன. வரலாற்றியலாக, சாப்பாட்டு உப்பும் பிற பொன்ம உப்புகளும் களைக்கொல்லிகளாக பயன்பட்டுள்ளன. என்றாலும் இவை பின்னர் வழக்கிறந்துவிட்டன. சில நாட்டு அரசுகள் இவை நிலையாக மண்ணில் தங்கி விடுவதால் இவற்றைத் தடை செய்துள்ளன. இவை போரிலும் பயன்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையிலும், புல்தரை மேலாண்மையிலும் களைக்கொல்லிகள் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பொதுவாகத் தேவையற்ற களைகளை மட்டுமே அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Sprayed_weeds.jpg/640px-Sprayed_weeds.jpg)
தற்காலக் களைக்கொல்லிகள் தாவர இசைமங்களால் தொகுப்புவகைப் போன்மிகளே. எனவே இவை இலக்குப் பயிர்களின் வளர்ச்சியுடன் குறுக்கிடு செய்கின்றன. இப்போது இயற்கைக் களைக்கொல்லிகள் இயற்கை வேளாண்மையில் பயன்படுகின்றன. சில தாவரங்கள் அல்லது பயிர்கள் தம் கருப்பு வாதுமை, வாதுமை போன்ற தாவரங்கள் இயற்கைக் களைக்கொல்லிகளை உருவாக்குகின்றன; இயற்கைக் களைக்கொல்லிகளின் செயல்பாடும் இதுசார்ந்த வேதிப்பொருட்களின் ஊடாட்டமும் தாவர உயிர்வேதி ஊடாட்டம் எனப்படுகிறது. வேளாண் பயிர்களின் களைக்கொல்லித் தடுதிறத்தால் களைக்கொல்லிகள் வேற்றுச் செயல் பொருட்களுடன் பயன்படுத்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை களைக்கொல்லியோடு தீங்குயிர் கட்டுபாட்டு முறைகளையும் பயன்கொள்கிறது.
ஐக்கிய அமெரிக்காவில் 2007 இல் 83% எடையுள்ள களைக்கொல்லி பயன்பாடு வேளாண்மையிலேயே அமைந்தது.[1]:12 உலகளாவியநிலையில் 2007 ஆம் ஆண்டைய தீங்குயிர்கொல்லி பயன்பாடு 39.4 பில்லியன் டாலராக இருந்தது; இதில் களைக்கொல்லி பயன்பாடு பேரளவாக 40% ஆகவும் எஞ்சிய பகுதி பூச்சிக் கொல்லியாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் பிற வகைகளாகவும் அமைந்தது.[1]:4 களைக்கொல்லிகள் கானியலிலும் பயன்படுத்தப்பட்டன.[2] கானியலில், குறிப்பாக வன்மரங்கள் திட்டமிட்டு நீக்கி, ஊசியிலை மரங்களும் மேய்ச்சல்பயிர்களும் வளர முன்னுரிமை தரப்பட்டது.[3] இந்த இடங்கள் காட்டு விலங்குகள் வாழிட மேலாண்மைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.