![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Kalsi04.jpg/640px-Kalsi04.jpg&w=640&q=50)
கல்சி, டேராடூன்
உத்திரகண்டத்தில் உள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
கல்சி (Khalsi, Dehradun) என்பது உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரானது பேரரசர் அசோகரின் முக்கிய கல்வெட்டுக் குழுவான கல்சியின் பாறைக் கல்வெட்டுகளுக்காக அறியப்படுகிறது. கல்சி பாறையில் 1 முதல் 14 வரையிலான முக்கிய கல்வெட்டு ஆணைகள் உள்ளன. [1]
விரைவான உண்மைகள் கல்சி, நாடு ...
கல்சி | |
---|---|
ஆள்கூறுகள்: 30.5180°N 77.8482°E / 30.5180; 77.8482 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | டோராடூன் |
மூடு
13 ஆம் எண் கொண்ட அசோகரின் கல்சி பாறைக் கலவெட்டானது, கிரேக்க மன்னர்களான அந்தியோகஸ், தலமி, ஆன்டிகோனஸ், மாகாஸ் இரண்டாம் அலெக்சாந்தர் ஆகியோரை அவரது போதனைகளைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறது. [2]