கத்தோலிக்க செபமாலை
From Wikipedia, the free encyclopedia
கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். செபமாலையின் ஆங்கிலச்சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது. செபமாலையில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன.
பாரம்பரியப்படி செபமாலையில் 15 மறைபொருள்களை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே புனித ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2002-இல் இதனோடு மேலும் 5 மறைபொருள்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின் மறைபொருள் என்னும் பெயரில் சேர்த்தார்.