![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/1_Sannyasi_in_yoga_meditation_on_the_Ganges%252C_Rishikesh.jpg/640px-1_Sannyasi_in_yoga_meditation_on_the_Ganges%252C_Rishikesh.jpg&w=640&q=50)
கதாசுருதி உபநிடதம்
ஆன்மீகம், துறவற வாழ்க்கை, மறுப்பு பற்றிய ஒரு இந்து சமய உரை / From Wikipedia, the free encyclopedia
கதாசுருதி உபநிடதம் ( Kathashruti Upanishad) என்பது இந்து சமயத்தின் ஒரு சிறிய உபநிடதம் ஆகும். [2] சமசுகிருத உரையான இது 20 சந்நியாச உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3]மேலும், யசுர்வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [4]
விரைவான உண்மைகள் கதாசுருதி உபநிடதம், தேவநாகரி ...
கதாசுருதி உபநிடதம் | |
---|---|
![]() இது இந்து சமயத் துறவிகளின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது. | |
தேவநாகரி | कठश्रुति |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | கதாசுருதி |
உபநிடத வகை | சந்நியாசம் |
தொடர்பான வேதம் | யசுர் வேதம் |
அத்தியாயங்கள் | 1 |
பாடல்களின் எண்ணிக்கை | 42[1] |
அடிப்படைத் தத்துவம் | வேதாந்தம் |
மூடு
துறவு பற்றிக் கூறும் இந்த பண்டைய உரை இந்து சமயத் துறவிகளின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது.[5][6]ஒரு சன்னியாசி என்பவர் ஆன்மாவைப் பற்றி சிந்திக்க வேண்டும், எந்த உடைமையும் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும், எல்லா உயிர்களிடமும் இரக்கத்துடன் இருக்க வேண்டும், யாரேனும் தன்னைப் புகழ்ந்தால் மகிழ்ச்சியடையக்கூடாது, யாரேனும் தன்னைத் துன்புறுத்தும்போது சபிக்கக்கூடாது.[7][8]