கண்ணீர் புகை குண்டு
From Wikipedia, the free encyclopedia
கண்ணீர் புகை குண்டு (ஆங்கிலம்:Tear gas, formally known as a lachrymatory agent or lachrymator) என்பது வேதியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு ஆயுதமாகும். இது மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்துகிறது. மேலும் தற்காலிக பார்வைக் கோளாறை உண்டு பண்ணுகிறது.
பொதுவாக கண்ணீர் புகை குண்டுகளில் ஓசி, சிஎசு, சி ஆர், சிஎன், நானிவமைட், ப்ரோமோசிடோன், பினாசில் பிரோமைட், சிலில் பிரோமைட், மற்றும் சின்-பிரோப்அனதியல்-எசு-ஆக்சைட் (வெங்காயத்திலிருந்து கிடைப்பவை) ஆகிய கலவைகளை கொண்டுள்ளன.