கண்டராதித்தர்
சோழ மன்னன் / From Wikipedia, the free encyclopedia
இராசகேசரி வர்மன் கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் பொ.ஊ. 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
விரைவான உண்மைகள் கண்டராதித்த சோழன், ஆட்சிக்காலம் ...
கண்டராதித்த சோழன் | |
---|---|
ராஜகேசரி, மேற்கே எழுந்தருளின தேவர் தஞ்சாவூர் அரசர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 955–956 |
முன்னையவர் | முதலாம் பராந்தக சோழன் |
பின்னையவர் | அரிஞ்சய சோழன் |
அரசி | செம்பியன் மாதேவி வீரநாராயணியார்[1] |
குழந்தைகளின் பெயர்கள் | உத்தம சோழன் |
தந்தை | முதலாம் பராந்தக சோழன் |
மதம் | சைவ சமயம் |
மூடு