கடாரம்
From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை கெடா மாநிலத்தின் பழைய பெயரிலான கடாரம் பற்றியது. கெடா மாநிலம் பற்றி அறிய கெடா கட்டுரையைப் பார்க்க.
கடாரம் அல்லது காழகம் (ஆங்கிலம்: Kaṭāram; Kataha; Kalahbar; மலாய்; Kadara; அரபு: قتح (qataḥa) அல்லது قلحبر (qalaḥbar); சயாமிய மொழி: ไทรบุรี; (Syburi); (Sai Buri); சீனம்: 卡达拉); என்பது கி.மு. 788-ஆம் ஆண்டில் மெர்போக் ஆற்றுப் படுகையின் வடக்குப் பகுதியில் உருவான ஒரு பெருநிலக் குடியேற்றப்பகுதி ஆகும். இந்தக் குடியேற்றப்பகுதி பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் கடாரம், நாடு ...
கடாரம் | |
---|---|
பெருநிலம் | |
பூஜாங் பள்ளத்தாக்கு | |
ஆள்கூறுகள்: 6°07′42″N 100°21′46″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
தலைநகரம் | அலோர் ஸ்டார் |
பெருநகரம் | சுங்கை பட்டாணி |
அரச நகரம் | அனாக் புக்கிட் |
உயர் புள்ளி | 1,862 m (6,109 ft) |
கடாரம் | கி.மு.788 |
கெடா துவா | (330–1136) |
சுயாட்சி சுல்தானகம் | (1136–1821) |
சயாம் | (1821–1909) |
ஐக்கிய இராச்சியம் | (1909–1941) (1945–1946) |
ஜப்பானிய ஆக்கிரமிப்பு | 1942 |
மலாயா ஒன்றியம் | 1946 |
மலேசியா | 1963 |
மூடு
மெர்போக் ஆறு மற்றும் மூடா ஆறு ஆகிய இரு ஆறுகளின் படுகைகள், சுமார் 1000 சதுர மைல் பரப்பளவு கொண்டவை. அந்த முதல் குடியேற்றத்தின் தலைநகரம் மெர்போக் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இந்தப் பகுதி இப்போது சுங்கை பத்து என்று அழைக்கப்படுகிறது.[1]
பொ.ஆ. 330-ஆம் ஆண்டில் இருந்து; 1136-ஆம் ஆண்டு வரையில் கெடா துவா (Old Kedah) எனும் பெயரிலும் அறியப்பட்ட ஒரு பெருநிலப் பகுதியாகும்.[2]