![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Modern-marine-reptiles-001.jpg/640px-Modern-marine-reptiles-001.jpg&w=640&q=50)
கடல்வாழ் ஊர்வன
From Wikipedia, the free encyclopedia
கடல்வாழ் ஊர்வன (Marine reptile) என்பது கடல் வாழ்விடத்தில் வாழும் ஊர்வன ஆகும். இவை கடல் சூழலில் நீர் வாழ் அல்லது அரைவாசி வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளுடன் தம்மை மாற்றியமைத்துக்கொண்டுள்ளன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Modern-marine-reptiles-001.jpg/640px-Modern-marine-reptiles-001.jpg)
• உப்பு நீர் முதலை (மேல் இடது)
• கடல் ஆமை (மேல் வலது)
• கடற்பேரோந்தி (கீழ் இடது)
• கடல் பாம்பு (கீழ் வலது)
ஆரம்பக் கால கடல்வாழ் ஊர்வன பேர்மியன் காலகட்டத்தில் பேலியோசூயிக் சகாப்தத்தில் தோன்றின. மீசோசூயிக் காலத்தில், பல ஊர்வன குழுக்கள் கடல் வாழ்க்கைக்கு ஏற்றவையாக மாறின, இதில் இச்தியோசர்கள், பிளீசியோசர்கள் (இந்த இரண்டு வரிசைகளும் "எனலியோசாரியா" குழுவில் ஒன்றுபட்டதாகக் கருதப்பட்டது) போன்ற பழக்கமான கிளாட்கள் அடங்கும்.[1] மொசாசர்கள், நோத்தோசர்கள், ப்ளாக்கோடோன்ட்கள், கடல் ஆமைகள், தாலடோசர்கள் மற்றும் தாலடோசூசியர்கள் அடங்கும். கிரீத்தேசியக் காலமுடிவில் இனவழிப்பு நிகழ்விற்குப்பின் கடல்வாழ் ஊர்வன குறைவான எண்ணிக்கையிலிருந்தன. ஆனால் ஆரம்பக்கால சீனோசூயிக்கில் "உண்மையான" கடலாமைகள், போத்ரெமிடிட்கள்,[2] பாலியோபிட் பாம்புகள், சோரிஸ்டோடெரா போன்ற சைமொடொசாரசு மற்றும் டைரொசாரிடு குரோகோடைலொமார்ப்சு எண்ணிக்கையில் அதிக இனங்களாகக் காணப்பட்டன. பல்வேறு வகையான கடல் கேவியாலிட் முதலைகள் சமீபத்தில் பிந்தைய மியோசீன் போலப் பரவலாகக் காணப்பட்டன.[3]
தற்போது ஏறத்தாழ 12000 ஊர்வன சிற்றினங்கள் மற்றும் துணை சிற்றினங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 100 இனங்கள் மட்டுமே கடல்வாழ் ஊர்வன என வகைப்படுத்தப்படுகின்றன. தற்கால கடல் வாழ் ஊர்வனவற்றில் கடற்பேரோந்தி, கடல் பாம்புகள், கடலாமைகள் மற்றும் உப்புநீர் முதலைகள் அடங்கும்.[4]
இக்தியோசர்கள், பிளீசியோசர்கள், மெட்ரியோஹைஞ்சிட் தாலடோசுசியன்கள், மற்றும் மொசாசர்கள் போன்ற சில கடல் ஊர்வன, கடல்வாழ் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாறியுள்ளன. இவை நிலத்தில் இறங்க இயலாது மற்றும் குட்டிகளைத் தண்ணீரில் ஈன்று எடுக்கின்றன. கடல் ஆமைகள் மற்றும் உப்பு நீர் முதலைகள் போன்றவை கரைக்குத் திரும்பி முட்டையிடுகின்றன. சில கடல்வாழ் ஊர்வன அவ்வப்போது ஓய்வெடுக்கச் சுகமாகக் குளிர்காய நிலத்திற்கு வருகின்றன.