கடற்கரை மேலாண்மை
From Wikipedia, the free encyclopedia
கடற்கரை மேலாண்மை (Coastal management) என்பது வெள்ளப் பெருக்கு, அரிமானம் ஆகியவற்றில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளும் நுட்பங்களும் ஆகும். இந்நுட்பங்கள் கரை அரிமானத்தை நிறுத்தி நிலத்தை மீட்கிறது.[1]
புவி நிலப் பரப்பில் கடற்கரை வட்டாரங்கள் 15% அளவுப் பரப்பில் அமைகின்றன. ஆனால் அவை 40% அளவு உலக மக்கள்தொகைக்கு உணவு அளிக்கின்றன. ஏறத்தாழ 1.2 பில்லியன் மக்க்கள் கடலில் இருந்து 100 கிமீ தொலைவுக்குள்ளேயேk வாழ்கின்றனர். இவர்களது சராசரி அடர்த்தி உலகச் சராசரி மக்கள் அடர்த்தியை விட மூன்று மடங்காகும்.[2] நான்கில் மூன்று பங்கு உலகின் மக்கள் தொகை 2025 இல் கடற்கரைப் பகுதிகளில் வாழ்வர் என்பதால்லிந்தச் சிறிய பகுதி மாந்தச் செயல்பாடுகள் கடற்கரைகள் மீது பெருந்தாக்கத்தை விளைவிக்கும். இப்பகுதிகளில் செழிப்பான வளங்கள் செறிந்துள்ளதால் ஏராளமான பொருள்களையும் சேவைகளையும் தரவல்லதாக அமைவதால் இவையே வளணிக, தொழிலகச் செயல்பாடுகளின் மையங்களாக விளங்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அரைமடங்கு மக்கள்தொகையினர் கடற்கரையில் இருந்து 50 கிமீ தொலைவுக்குள்ளாகவே வாழ்கின்றனர். கடற்கரை வளங்கள் பெரும்பகுதி ஒன்றியத்தின் பொருள் வளத்தை உருவாக்குகின்றன. மீன்பிடித்தல், கப்பல் கட்டுதலும் வணிகமும், சுற்றுலா ஆகியவற்றைச் சார்ந்த தொழிலகங்கள் ஆகியன ஐரோப்பவின் 89,000 கிமீ கடற்கரைப் பகுதிக்குப் போட்டி போடுகின்றன. கடற்கரைப் பகுதிகள் ஐரோப்பாவின் மிகவும் விலைமிக்க இயற்கை வாழ்விடங்களாக விளங்குகிறது.
கடல்மட்ட உயர்வு வேகமாக முடுக்கப்படுவதால், கடல்மட்ட உயர்வுப் பாதுகாப்பு 21 ஆம் நூற்றாண்டில் முதன்மை வாய்ந்த பணியாகிவிடும். கடல்மட்ட உயர்வு மாற்றங்கள் கடற்கரைக்கும் கடற்கரைச் சூழலுக்கும் பேரழிவை உருவாக்கும். அலைகளாலும் ஓதங்களாலும் கடர்கரை படிவுகள் குலைக்கப்படுகின்றன.