![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/Kanjanur_Sukkiran_Temple.jpg/640px-Kanjanur_Sukkiran_Temple.jpg&w=640&q=50)
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குட்பட்ட கோயிலாகும்.
தேவாரம்,பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[1] | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 11.046385°N 79.494425°E / 11.046385; 79.494425 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கம்ஸபுரம், கம்சனூர், பராசரபுரம், அக்னிபுரம், முக்திபுரம், பலாசவனம், அக்கினித்தலம், பிரம்மபுரி[1] |
பெயர்: | ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | கஞ்சனூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அக்னீஸ்வரர் |
தாயார்: | கற்பகாம்பிகை |
தல விருட்சம்: | புரச மரம் |
தீர்த்தம்: | அக்னி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம்,பெரிய புராணம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர் |
கோயில் அறக்கட்டளை: | மதுரை ஆதீனம் |
கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.[1]
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]
சிவபெருமானே, சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.
- இறைவன் : அக்னீச்வரர்
- அம்பாள் : கற்பகாம்பாள்
- விருட்சம் : புரச மரம்
- தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
- பதிகம் : அப்பர்
- நவக்கிரகத் தலம் : சுக்ரன்
இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி, காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில், இது சுக்கிரனுடைய தலமாகும். சுக்கிரனின்