கஜா புயல்
தமிழ்நாடு தாக்கப்பட்டது / From Wikipedia, the free encyclopedia
கஜா புயல் (Severe cyclonic storm GAJA) என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.[1] இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
விரைவான உண்மைகள் Severe cyclonic storm (இ.வா.து. அளவு), தொடக்கம் ...
Severe cyclonic storm (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
கஜா புயல் நவம்பர் 15 அன்று தென்னிந்தியாவை நெருங்குகிறது | |
தொடக்கம் | நவம்பர் 10, 2018 |
மறைவு | நவம்பர் 21, 2018 |
(Remnant low after நவம்பர் 20) | |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 110 கிமீ/ம (70 mph) 1-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph) |
தாழ் அமுக்கம் | 992 hPa (பார்); 29.29 inHg |
இறப்புகள் | 63 (மொத்தம்)[1] |
சேதம் | $775 மில்லியன் (2018 US$) |
பாதிப்புப் பகுதிகள் | தெற்கு வியட்நாம், மலாய் தீபகற்பம், அந்தமான் தீவுகள், இலங்கை, தென்னிந்தியா (தமிழ்நாடு, புதுச்சேரி) |
2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி | |
மூடு
இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.[2]