கங்கை வழிபாடு
திரிபுரா மக்களின் வழிபாடு / From Wikipedia, the free encyclopedia
கங்கை வழிபாடு (Ganga puja) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கொண்டாடப்படும் ஒரு மத விழாவாகும் . பழங்குடியின திரிபுரி மக்கள் ஆற்றினைத் தெய்வத்தை வழிபடுகிறார்கள். மேலும் இவர்கள் தொற்றுநோய்களிலிருந்து காப்பாற்றப்படவும், கர்ப்பிணிப் பெண்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தில் ஆற்றின் நடுவில் அல்லது நீரோடையில் மூங்கிலால் ஆன கோயில் ஒன்றைக் கட்டுவர். உள்ளூரில் கங்கை என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றினை இவர்கள் கடவுளாக வணங்குகின்றனர். இப்பகுதியில் வழிபடப்படும் பதினான்கு பிரதான தெய்வங்களில் கங்கையும் ஒன்றாகும். இந்த விழா மாநிலம் முழுவதும் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. சோம கங்கா பூசை இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் ஒரு மத திருவிழா ஆகும். இந்து சந்திர சூரிய நாட்காட்டியின்படி இதன் தேதி நிர்ணயிக்கப்பட்டு மார்ச், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மாநிலம் முழுவதும் திருவிழா பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது.