கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்
அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.[1] கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.[1] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[2]
விரைவான உண்மைகள் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் | |
---|---|
கோயில் வளாகத்தின் முழுத் தோற்றம் | |
ஆள்கூறுகள்: | 11°12′22″N 79°26′55″E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | அரியலூர் |
ஏற்றம்: | 51 m (167 அடி) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | இராசேந்திர சோழன் |
மூடு