ஓல்கர் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
ஓல்கர் வம்சம் மராத்தாவின் அரசர்களாகவும் [1][2][3], இந்தோரின் மன்னர்களாகவும் 1818 வரையிலும் ஆண்டவர்களாவர், அதன்பிறகு மன்னர் அரசாக பிரித்தானிய அரசின் கீழ் இருந்தனர். ஓல்கர் வம்சம், 1721-ம் ஆண்டு பேஷ்வாக்களின் சேவையாளராக இணைந்த மல்கர் ராவ் என்பவர் சுபேதாராக பதவி உயர்ந்தவரால் துவங்கப்பட்டது. இவரை மக்கள் ஓல்கர் மன்னர் எனவும் குறிப்பிட்டனர்.
பிரித்தானிய ஆட்சியின் கீழ், ஓல்கர் மன்னருக்கு 19-குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த இந்தோர் மாநிலமானது, சூன் 16, 1948-ம் நாள் இந்திய அரசுடன் இணைந்தது.