ஏவுகணை
From Wikipedia, the free encyclopedia
ஏவுகணை என்பது தானாக உந்திச் சென்று தாக்கக்கூடிய ஒரு வான்வழி ஆயுதமாகும். இதன் உந்துசக்தி பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் தாரைப் பொறி மூலமாகவோ பெறப்படுகிறது.[1]
வரலாற்று ரீதியாக, ஏவுகணை என்பது ஒரு இலக்கை நோக்கி எறியப்பட்ட, சுடப்பட்ட அல்லது செலுத்தப்படும் எந்தவொரு பொருளையும் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. பொதுவாக எந்த ஒரு வழிகாட்டுதல் இல்லாது சென்று தாக்கும் ஆயுதங்கள் ஏவூர்தி என விவரிக்கப்பட்டன. சுய உந்துவிசை இல்லாத வெடிகுண்டுகளை ஏவும் சாதனங்கள் பீரங்கிகள் என்று அழைக்கப்பட்டன.[1]
ஏவுகணைகள் பொதுவாக வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி உந்திச் சென்று தாக்கும் ஆயுதங்களகும். வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் பொதுவாக ஐந்து அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன: இலக்கு குறிபார்த்தல், வழிகாட்டப்படல், பறக்கட்டுப்பாட்டு, இயந்திர பொறி மற்றும் வெடிமுனை. ஏவுகணைகள் ஏவும் தளம் மற்றும் இலக்குகள் அமைப்பை பொறுத்து பல விதங்களாக பிரிக்கப்படுகின்றன.