ஏபெல் டாஸ்மான்
From Wikipedia, the free encyclopedia
ஏபெல் டாஸ்மான் (Abel Janszoon Tasman; 1603 – அக்டோபர் 10, 1659), என்பவர் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார்.
விரைவான உண்மைகள் ஏபெல் டாஸ்மான், பிறப்பு ...
ஏபெல் டாஸ்மான் | |
---|---|
பிறப்பு | 1603 Lutjegast |
இறப்பு | 10 அக்டோபர் 1659 ஜகார்த்தா |
பணி | தேடலாய்வாளர், seafarer |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | செலுத்துநர் |
மூடு
இவர் தனது 1642 மற்றும் 1644 ஆம் ஆண்டுகளுக்கான டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கான பிரபல்யமான கடற்பயணங்களுக்காக அறியப்படுகிறார். இவரே முதன் முதலாக வான் டியெமன் நிலம் (தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவுகளுக்கும், நியூசிலாந்து மற்றும் பிஜி தீவுகள் போன்றவற்றையும் கண்ட முதல் ஐரோப்பியர் ஆவார். அத்துடன் இவரும் இவருடன் பயணம் செய்தவர்களும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பசிபிக் தீவுகள் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கண்டறிந்தனர்.[1][2][3]