எழிமலை
From Wikipedia, the free encyclopedia
எழிமலை (Ezhimala, மலையாளம்: ഏഴിമല) என்பது தென் இந்திய மாநிலமான, கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில், பையனூர் அருகே உள்ள ஒரு மலைப் பகுதியாகும். இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 286 மீட்டர் உயரம் கொண்டது. கண்ணூருக்கு வடக்கே 38 கி.மீ தொலைவில் தனித்து உள்ள இந்த மலைப் பகுதி கடலோடிகளுக்கான நில அடையாளமாக உள்ளது.
விரைவான உண்மைகள் எழிமலை, உயர்ந்த புள்ளி ...
எழிமலை | |
---|---|
எழிமலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 286 m (938 அடி) |
ஆள்கூறு | 12°01′06″N 75°12′57″E |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, கேரளம் |
நாடு | இந்தியா |
மூலத் தொடர் | அரபிக்கடலை ஒட்டிய தனித்த பகுதி |
மூடு
எழிமலையானது பண்டைய புலி நாட்டின் தலைநகராக, முக்கியமான வரலாற்று தளமாக கருதப்படுகிறது. பொது ஊழியின் தொடக்கத்தில் செழிப்பான துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இது திகழ்ந்தது. எழிமலை 11 ஆம் நூற்றாண்டில் சோழர் - சேரர் போர்களில் முக்கிய போர்க்களங்களில் ஒன்றாக இருந்தது. கௌதம புத்தர் எழிமலைக்கு வந்ததாக சிலர் நம்புகிறனர்.