எல்லாளன்
அனுராதபுர மன்னன் / From Wikipedia, the free encyclopedia
எல்லாளன் (ஆங்கிலம்: Ellalan) பொ.ஊ.மு. 205 இல் இருந்து பொ.ஊ.மு. 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட மனு மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்வை எல்லாளன்[1] என்னும் மன்னன் செய்தாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு நோக்கில் இக்கட்டுரை மனுநீதிச் சோழனையும், எல்லாளனையும் இணைத்துக் காட்டுகிறது.
விரைவான உண்மைகள் எல்லாளன், ஆட்சி ...
எல்லாளன் | |
---|---|
அனுராதபுரத்தின் சோழ மன்னன் | |
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள எல்லாளன் சிலை | |
ஆட்சி | பொ.ஊ.மு. 205 – பொ.ஊ.மு. 161 |
முன்னிருந்தவர் | அசேலன் |
துட்டகாமினி | |
மொழி | தமிழ் மொழி |
அரச குலம் | சோழர் |
பிறப்பு | பொ.ஊ.மு. 235 |
இறப்பு | பொ.ஊ.மு. 161 |
சமயம் | சைவ சமயம் |
மூடு