எபியால்ட்டீஸ்
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு ஏதெனிய தளபதி / From Wikipedia, the free encyclopedia
எபியால்ட்டீஸ் (Ephialtes கிரேக்கம்: Ἐφιάλτης, Ephialtēs ) என்பவர் பண்டைய ஏதெனிய அரசியல்வாதி மற்றும் சனநாயக இயக்கத்தின் ஆரம்பகால தலைவராவார். கிமு 460 களின் பிற்பகுதியில், பழமைவாதத்தின் பாரம்பரிய கோட்டையான அரியோபாகு அவையின் சக்தியைக் குறைக்கும் சீர்திருத்தங்களை இவர் மேற்கொண்டார். மேலும் பல நவீன வரலாற்றாசிரியர்களால் ஏதென்சில் பிரபலமான தீவிர சனநாயகத்தின் தொடக்கத்துக்கான குறிப்பிடத்தக்க நபர் என்று கருதப்படுகின்றார். இவர் பொது அலுவலகங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஊதியத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பொது அலுவலகத்தை வைத்திருப்பதற்கான சொத்து தகுதிகளை குறைத்தார், மேலும் குடியுரிமைக்கு புதிய வரையறையை உருவாக்கினார். [1] இருப்பினும், எபியால்ட்டீஸ் இந்த புதிய அரசாங்கத்தில் நீண்ட காலம் பங்கேற்க முடியவில்லை. இவர் கிமு 461 இல் படுகொலை செய்யப்பட்டார். ஒருவேளை இவரின் சனநாயக செயல்பாடுகளால் வெறுப்படைந்த சிலவர் ஆட்சி ஆதரவாளர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்டிருக்கலாம். அதன்பிறகு ஏதென்சின் அரசியல் தலைமை இவரது சகாவான பெரிக்கிள்சிடம் ஒப்படைக்கப்பட்டது.