எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்
From Wikipedia, the free encyclopedia
தன்னாட்சி சமூகங்கள் (ஆங்கில மொழி: autonomous community, எசுப்பானியம்: comunidad autónoma) 1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எசுப்பானிய அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட முதல்நிலை அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளாகும். எசுப்பானிய நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினரையும் மண்டலங்களையும் ஒன்றிணைக்க அவர்களுக்கு தன்னாட்சியை உறுதிசெய்யும் நோக்கோடு இந்தப் பிரிவுகள் உண்டாக்கப்பட்டன.[1][2][3]
தன்னாட்சி சமூகம் | |
---|---|
வகை | தன்னாட்சி அமைப்பு |
அமைவிடம் | எசுப்பானியா |
உருவாக்கம் | 1978 எசுப்பானிய அரசியலமைப்புச் சட்டம் |
உருவாக்கப்பட்டது | 1979–1983 |
எண்ணிக்கை | 17 (+2 தன்னாட்சி நகரங்கள்) |
மக்கள்தொகை | 78,476–8,415,490 |
பரப்புகள் | 4,992–94,222 கிமீ² |
அரசு | தன்னாட்சி அரசு |
உட்பிரிவுகள் | மாநிலம் கோமார்கா நகராட்சி |
முழுமையான நாட்டிற்கு மட்டுமே இறையாண்மை இருப்பதால் (தேசிய அல்லது நடுவண் அரசு இயந்திரங்களால் செயற்படுத்தப்படுவதால்) இந்தச் சமூகங்களுக்கு இறையாண்மை இல்லை. அதாவது எசுப்பானியா ஓர் கூட்டாட்சி அல்ல; ஆட்சி மிகவும் பரவலாக்கப்பட்ட[4][5] ஒருமுக அரசு[1] ஆகும். சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளன.[1]
எசுப்பானியாவில் மொத்தம் 17 தன்னாட்சி சமூகங்களும் 2 தன்னாட்சி நகரங்களும் உள்ளன; இவை கூட்டாக "தன்னாட்சிகள்" என அறியப்படுகின்றன.