எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம் (Thirty-first Dynasty of Egypt or Dynasty XXXI, alternatively 31st Dynasty or Dynasty 31), அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் கிமு 343-இல் முப்பதாம் வம்சத்தவர்களை வென்று, இரண்டாவது முறையாக பண்டைய எகிப்தைக் கைப்பற்றி, அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 343 முதல் கிமு 332 வரை 11 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆண்ட அகாமனிசிய பேரரசினரை, எகிப்தின் முப்பத்தின் ஒன்றாம் வம்சத்தவர் என்பர். கிமு 332-இல் கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர், எகிப்தை ஆண்ட் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸை வென்று எகிப்தை கைப்பற்றினார். அத்துடன் எகிப்தில் அகாமனிசியப் பேரரசின் 31-ஆம் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் அகாமனிசியப் பேரரசின் எகிப்திய மாகாணம் எகிப்தின் 31-ஆம் வம்சம் | |||||
மாகாணம், அகாமனிசியப் பேரரசு | |||||
| |||||
[[பாரசீகக் கொடி|முதலாம் சைரஸ்]] | |||||
அகாமனிசியப் பேரரசில் மேற்கில் பண்டைய எகிப்து[1][2][3][4] | |||||
எகிப்திய பார்வோன் | |||||
• | கிமு 343–338 | மூன்றாம் அர்தசெராக்சஸ் (முதல்) | |||
• | கிமு 336–332 | மூன்றாம் டேரியஸ் (இறுதி) | |||
வரலாற்றுக் காலம் | பாரம்பரியக் காலம் | ||||
• | மூன்றாம் அர்தசெராக்சஸ் எகிப்தை கைப்பற்றுதல் | கிமு 343 | |||
• | பேரரசர் அலெக்சாந்தர் எகிப்தை கைப்பற்றுதல் | கிமு 332 | |||
பண்டைய எகிப்தை இதே அகாமனிசியப் பேரரசினர் இரண்டாம் முறையாக கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் ஆண்டனர். இவர்கள் எகிப்தின் 27-ஆம் வம்சத்தவர்களாகவும், 31-ஆம் வம்சத்தவர்களாகவும் ஆட்சி செய்தனர்.