உமர் ஷேக் மிர்ஸா II
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உமர் சேக் மிர்சா (Umar Shaikh Mirza II) (கி.பி.1469-1494 ) பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக இருந்தார். தற்போது அறியப்படுகின்ற கசக்கஸ்தான், உசுபெக்கிசுத்தான், கிழக்கு ஈரான் மற்றும் ஆப்கானிசுத்தான் பகுதிகளின் பேரரசராக இருந்த அபு சையத் மிர்சாவின் நான்காவது மகனாக இவர் பிறந்தார்
உமர் ஷேக் மிர்ஸா II عمر شیخ میرزا | |
---|---|
பெர்கானா பள்ளத்தாக்கின் மன்னன் | |
![]() | |
துணைவர் | குத்லூக் நிஜார் கானம் (m.1450-76) ஆலுஸ் அகா பாத்மா சுல்தான் ஆகா கராகஸ் பேகம் ஆமித் அகாஷா யுன் சுல்தான் அகாஷா ஆகா சுல்தான் அகாஷா |
குழந்தைகளின் பெயர்கள் | கான்ஸாதா பேகம் பாபர், முகலாய பேரரசர் இரண்டாம் ஜஹாங்கிர் மிர்ஸா நாசர் மிர்ஸா மெஹர் பேனு பேகம் ஷேர் பேனு பேகம் யட்சர் சுல்தான் பேகம் ருகையா சுல்தான் பேகம் |
மரபு | தைமூரின் வழி |
தந்தை | அபு சைத் மிர்சா |
தாய் | ஷா சுல்தான் பேகம் |
மதம் | இசுலாம் |
சாகட்டாய் கான்னெட்டின் மொகுலிசுதான் மன்னன் யூனுசு கானின் மகள் இளவரசி குதுல்ஃப் நிகர் கான் உமரின் முதல் மனைவியும் தலைமைச் சேவகருமாக இருந்தார். இவருடன் உமருக்கு வேறு இரண்டு மனைவிகள் இருந்தனர். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் பிறந்தனர். மூத்த மகன் பாபுர் மிர்சா முதல் மனைவி குதுல்ஃப் நிகர் கானுக்கு பிறந்தவர் ஆவார். இரண்டாம் சகாங்கிர் மிர்சா மற்றும் நாசீர் மிர்சா ஆகிய இருவரும் மற்ற இரண்டு மனைவிகளுக்கு பிறந்தவர்களாவர். மூத்த மகன் பாபர் மிர்சா 1526 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசை நிறுவினார். இவரே முகலாயப் பேரரசின் முதல் பேரரசரும் ஆவார்.
1494 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் இரண்டாம் உமர் சேக் மிர்சா வடக்கு பெர்கானாவில் உள்ள அக்சி கோட்டையில் ஒரு தனிப்பட்ட விபத்தில் இறந்தார். கட்டிடத்தின் விளிம்பில் கட்டப்பட்ட மேல்மாடம் சரிந்து விழுந்து இவ்விபத்து நிகழ்ந்தது. இதனால் பதினோரு வயதான பாபர் பெர்கானாவின் ஆட்சியாளர் ஆனார்.[1]