![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Thirumoorthi_reservoir_01.jpg/640px-Thirumoorthi_reservoir_01.jpg&w=640&q=50)
உடுமலைப்பேட்டை
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மிகமுக்கியமான நகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சிதான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில்தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையின்மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது.[4]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Thirumoorthi_reservoir_01.jpg/640px-Thirumoorthi_reservoir_01.jpg)
உடுமலைப்பேட்டை | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | 10°35′08″N 77°15′05″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருப்பூர் | ||||||
வட்டம் | உடுமலைப்பேட்டை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | மு.மத்தீன் | ||||||
ஆணையர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | உடுமலைப்பேட்டை | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,53,633 (2011[update]) • 20,733/km2 (53,698/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
7.41 சதுர கிலோமீட்டர்கள் (2.86 sq mi) • 387 மீட்டர்கள் (1,270 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | http://123.63.242.116/udumalaipet/abtus_municipality.htm |
உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன. உடுமலைப்பேட்டை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.