![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Nadab_of_Israel.jpg/640px-Nadab_of_Israel.jpg&w=640&q=50)
இஸ்ரவேலின் நாதாபு
இஸரவேலின் பலிகள் / From Wikipedia, the free encyclopedia
நாதாபு (Nadab) வடக்கு இசுரேலிய இராச்சியத்தின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் எரொபவாமின் மகனும், இராச்சியத்தின் வாரிசும் ஆவார்.
விரைவான உண்மைகள் இசுரவேலின் நாதாபு, ஆட்சிக்காலம் ...
மூடு
யூதாவின் அரசரான ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், எரொபவாவின் மகன் நாதாபு இஸ்ரேலின் அரசரானார்.[1][2] வில்லியம் எஃப். ஆல்பிரைட் என்பவர் கி.மு 901 - 900 வரை இவர் ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறார்.[3]
நாதாபும், இசுரேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டியிருக்கையில் அவனுடைய தளபதிகளுள் ஒருவனான பாசா அவனுக்கு எதிராகக் கலகம் பண்ணி அவனைக் கொன்று போட்டான். பின் அவனே இசுரவேலுக்கு மன்னரானான்.[2] நாதாபைக் கொன்ற பின் பாசா அவன் வீட்டார் அனைவரையுமே கொன்று போட்டான்.
சிலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின் படி எரொபாவின் குடும்பத்தவர் அனை வரையும் பாசா அழித்தான்.[2]